சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு பரபரப்பு

" alt="" aria-hidden="true" />


சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு பரபரப்பு


சென்னை அண்ணா மேம்பாலம் என்பது சென்னையின் இதயப்பகுதியாகும். இதன் அருகில் தான் அமெரிக்க தூதரகம் உள்ளது. நட்சத்திர விடுதிகளும் ஏராளமாக உள்ளன. பல முக்கிய அலுவலகங்கள் உள்ளன.


சென்னையின் அனைத்து பகுதியையும் இணைக்கும் முக்கியமான பாலம் ஆகும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாலங்களில் இதுவும் ஒன்று.


இந்நிலையில் காமராஜர் அரங்கத்திற்கு அருகே மாலை சுமார் 4.30 மணி அளவில் மர்ம பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்திருக்கிறது. இந்த வெடிச்சத்தத்தின் காரணமாக அருகில் இருந்த கார் கண்ணாடிகள் உடைந்திருக்கின்றன


இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மர்ம நபர் ஒருவர் அண்ணா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றிருக்கிறார். இதுவே வெடித்து சிதறி இருக்கிறது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த செயலை செய்தவரை போலீசார்  வலை வீசி தேடி வருகிறார்கள்


Popular posts
<no title>திருப்பத்தூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மோர் வழங்கினார்
Image
திருவண்ணாமலையில் அரசு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இலங்கை அகதிகள்
Image
அரூர் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு ரூபாய் 100 மதிப்பில் காய்கறி அடங்கிய பை விற்பனையை உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார்
Image
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
எச்சரிக்கை! 20 அல்ல; இது 2020!!